சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சி, மன்னார், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான மாவட்ட மட்ட நிகழ்நிலை வினாடிவினா போட்டி 2021
யாழ் இந்தியத் துணைத் தூதரகம், இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் (ICCR) மற்றும் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டுத் திணைக்களம் என்பன இணைந்து 2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான மாவட்ட மட்ட நிகழ்நிலை வினாடிவினா போட்டியினை நடாத்தவுள்ளது.
வெற்றியாளர்கள் மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பின்வரும் பரிசில்கள் வழங்கப்படும்.
முதலாமிடம் – 20,000/-
இராண்டாமிடம் – 15,000/-
மூன்றாமிடம் – 10,000/-
மாணவர்கள் கீழ்க்குறிப்பிடப்பட்ட இணைப்பின் மூலம் பரீட்சையில் தோற்றமுடியும்.
பரீட்சை நிகழ்நிலை இணைப்பு - https://forms.gle/PAK2RZdGY5GUhi5A8
பரீட்சைத் திகதி: 18.06.2021 பிற்பகல் 02.00 - 04.00 மணிவரை
- பரீட்சையானது 18.06.2021 ந் திகதி பிற்பகல் 02.00 மணியிலிருந்து 04. 00 மணி வரையே செயல் வலுவில் இருக்கும்.
- பரீட்சை முடிவில் “Submit” பொத்தானை கிளிக் செய்து எமக்கு கிடைத்தவை மட்டுமே போட்டிக்காக எடுக்கப்படும்.