மாகாண விளையாட்டு விழா – 2024
கராத்தே போட்டி
மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் கராத்தே போட்டி கடந்த 2024.05.11 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டி அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 7.00 மணியளவில் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டு நிறைவுபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்விற்கு கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கஜேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில் யாழ்ப்பாண மாவட்ட அணி 06 தங்கம், 03 வெள்ளி மற்றும் 06 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 1 ம் இடத்தையும், முல்லைத்தீவு மாவட்ட அணி 02 தங்கம், மற்றும் 03 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 2 ம் இடத்தையும் கிளிநொச்சி மாவட்ட அணியினர் 01 தங்கம், 03 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்கள்பெற்று 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.வவுனியா மாவட்ட ஆண்கள் அணி 03 வெள்ளிப் பதக்கம் பெற்றுக்கொண்டது
மாகாண மட்டத்தில் பெண்கள் அணி சார்பில் கிளிநொச்சி மாவட்ட அணி 02 தங்கம், 04 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 1ம் இடத்தையும். வவுனியா மாவட்ட அணி 02 தங்கம், 02 வெள்ளி மற்றும் 01 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 2ம் இடத்தையும் யாழ்ப்பாண மாவட்ட அணி 02 தங்கம், மற்றும் 07 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 3 ம் இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி 01 தங்கம், 01 வெள்ளி மற்றும் 01 வெண்கலம் பெற்றுக் கொண்டது.
இப் போட்டியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்களில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்ககங்கள் பெற்ற போட்டியாளர்களும் பெண் போட்டியாளர்களில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்ற போட்டியாளர்களும் எதிர்வரும் 07.06.2024 ஆம் திகதி தொடக்கம் 09.06.2024 ஆம் திகதி வரை மாத்தறை மாவட்ட கொட்டாவில உள்ளக விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ள 48 வது தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.