Print

வேழம் படுத்த நூல் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிப்பிக்கப்பட்ட “வேழம் படுத்த வீராங்கனை”  நூல் வெளியீட்டு கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.12.2021 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி.சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.க. விமலநாகதன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.  கலைஞர்கள், மாணவர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரின் தலைமைரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்நூலுக்கான  வெளியீட்டுரையை முள்ளியவளை வரலாற்று ஆய்வாளர் திரு. அருணா செல்லத்துரை அவர்கள் வழங்கினார். அறிமுகவுரையை முல்லைத்தீவு குமுழமுனை அதிபர் திரு.க. ஜெயவீரசிங்கம் அவர்கள் வழங்கினார்;. நிகழ்லானது கரைதுறைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோத்தர் திரு.சி.ரி.ஆர் விமலேந்திரன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே முடிவுற்றது.

Hits: 3143