Print

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நூல் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்  இவ் ஆண்டு பல எழுத்தாளர்களின்  நூல்கள் வெளியிட்டுவைக்கப்பட்டன. அவையாவன,

  1. எழுத்தாளர் சாந்தன் அவர்களின் “சாந்தனின் படைப்புலகம் “ நூல் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 2021.11.01 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கும்.
  2. பேராசிரியர்.நா. சண்முகலிங்கன் அவர்கள் மீள்பதிப்பத்த வடகோவை சபாபதி நாவலரின் “திராவிடப்பிரகாசிகை” மற்றும் தெல்லிப்பளை வ. குமாரசாமி அவர்கள் தொகுத்த “கதிரைமலைப்பள்ளு” ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 2021.11.15 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கும்.
  3. பேராசிரியர்.நா. சண்முகலிங்கன் அவர்கள் மீள்பதிப்பத்த பேராசிரியர்.ப.சந்திரசேகரம் அவர்களின் “கல்வித்தத்துவம்” நூல் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 2021.11.22 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கும்.

பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.   அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,  கல்விப்புல  அறிஞர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

 

Hits: 2037