விளையாட்டு உத்தியோகத்தர் 11 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன
வடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் (தரம் III) சேவைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 11 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (24.02.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் கௌரவ ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் விளையாட்டு உத்தியோகத்தர்கள் (தரம் III) சேவைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கு அமைவாக, தகுதியான 125 பேர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 20 பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு, அவர்களில் தகுதி பெற்ற 11 பேருக்கே இன்றைய தினம் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் , ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர்கள், புதிதாக நியமனம் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.
















